- கமல்ஹாசன்
- திமுக
- K.Balakrishnan
- சென்னை
- DMK கூட்டணி
- மாநில செயலாளர்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- மக்களவை பொதுத் தேர்தல்
- தின மலர்
சென்னை: எங்கள் கொள்கையோடு உடன்பட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வருவது இயற்கையானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த தேர்தலில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிது. தொடர்ந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது; எங்கள் கொள்கையோடு உடன்பட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வருவது இயற்கையானது. திமுக கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது. கமல் திமுக கூட்டணியை ஆதரிக்க வருவது நல்ல செய்தி. திமுக கூட்டணியில் கமல் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணியாக, லட்சிய கூட்டணியாக இருப்பது எல்லோரையும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. ஏற்கெனவே வலுவாக உள்ள திமுக கூட்டணிக்கு கமல் வருகை மேலும் வலு சேர்க்கும் என்று அவர் கூறினார்.
The post எங்கள் கொள்கையோடு உடன்பட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு வருவது இயற்கையானது: கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.